ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடர்ச்சியாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்து வருகிறார். சர்வதேச அளவில் மிகவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக துளியும் அச்சமின்றி அவர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்ஷி, 579 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு அதிகம் வாய்ப்பிருப்பதால், அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு சூர்யவன்ஷிக்கு அதிக வாய்ப்பிருக்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை வைபவ் சூர்யவன்ஷி 53 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடர் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் தன்வசம் வைத்துள்ளார். ஐபிஎல் சீசன் ஒன்றில் அவர் 59 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். கிறிஸ் கெயிலின் இந்த சாதனையை முறியடிக்க வைபவ் சூர்யவன்ஷிக்கு இன்னும் 7 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன் கடைசி லீக் ஆட்டத்தில் நாளை (மே 24) மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Expectations have arisen as to whether Vaibhav Suryavanshi—who has been playing aggressively for the Rajasthan Royals in the ongoing IPL season—will break the record held by former West Indies player Chris Gayle.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
என்னுடைய இலக்கை ஐபிஎல் தொடங்கும் முன்பே எழுதி வைத்துவிட்டேன்: வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் 2026: வைபவ் சூர்யவன்ஷி சாதனை! அதிக ரன்கள் குவித்த டாப் - 5 பேட்டர்கள்!

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!








