திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

லக்னௌவுக்கு எதிரான தோல்வி சிஎஸ்கேவுக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கும்: ரவி சாஸ்திரி

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தோல்வியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கும் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

News image

சிஎஸ்கே வீரர்கள் - படம் | AP

Updated On :16 மே 2026, 4:31 pm IST

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தோல்வியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் ஐபிஎல் தொடர் மிகவும் சுவாரசியமாக மாறி வருகிறது. ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தோல்வியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி - கோப்புப் படம்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியிலிருந்து சிஎஸ்கேவுக்கு நிறைய நேர்மறையான விஷயங்கள் எடுத்துக் கொள்ள இருப்பதாக நான் கூறுவேன். பேட்டிங் செய்வதற்கு லக்னௌ ஆடுகளம் அவ்வளவு எளிதாக இல்லை. இருப்பினும், சிஎஸ்கே 187 ரன்கள் சேர்த்தது. சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் அதிக ரன்கள் எடுக்கவில்லை. அவர்கள் சிறப்பாக விளையாடினால், சிஎஸ்கேவுக்கு அது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கும்.

லக்னௌ போன்ற ஆடுகளங்களில் எந்த மாதிரியான லென்த்தில் பந்துவீச வேண்டும் என சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். சென்னை சேப்பாக்கத்தில் எப்படி பந்துவீசினால் விக்கெட்டுகள் வீழ்த்தலாம், ரன்களைக் கட்டுப்படுத்தலாம் என சிஎஸ்கே வீரர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். ஆனால், லக்னௌ போன்ற சவாலான ஆடுகளங்களில் பந்துவீசுவதற்கும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும். லக்னௌவுக்கு எதிரான போட்டி சிஎஸ்கேவுக்கு சரியாக அமையவில்லை. ஆனால், இந்த தோல்வியிலிருந்து சிஎஸ்கே நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கும் என்றார்.

லக்னௌவுக்கு எதிரான தோல்வி சிஎஸ்கே அடுத்து விளையாடவுள்ள இரண்டு லீக் போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கியுள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளை எதிர்த்து சிஎஸ்கே விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Ravi Shastri has stated that Chennai Super Kings will learn a great deal from their defeat against the Lucknow Super Giants.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.