ஐபிஎல் தொடரில் 200-வது போட்டியில் விளையாடும் முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் விளையாடி வருகிறது.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான இன்றையப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் விளையாடும் 200-வது ஐபிஎல் போட்டியாகும். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் 200 போட்டிகளில் விளையாடும் முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இதுவரை 200 போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார் 215 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Royal Challengers Bangalore player Bhuvneshwar Kumar has set the record for being the first fast bowler to play his 200th match in the IPL series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிராக சன்ரைசர்ஸ் பேட்டிங்; முதல் இரண்டு இடங்களுக்குள் நிறைவு செய்யுமா?

நுவான் துஷாராவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த ஆர்சிபி!

தனிநபர் சாதனையைக் காட்டிலும் அணியின் இலக்கே முக்கியம்: புவனேஷ்வர் குமார்








