மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இம்பாக்ட் பிளேயர் விதி நீடிக்குமா? ஐபிஎல் கேப்டன்களுடன் பிசிசிஐ ஆலோசனை!

ஐபிஎல் 2026 போட்டிகளுக்கு முன்னதாக அனைத்து கேப்டன்களுடன் ஆலோசனை நடத்திய பிசிசிஐ குறித்து...

News image

ஐபிஎல் 2026 அணிகளின் கேப்டன்கள். - படம்: எக்ஸ் / ஐபிஎல்

Updated On :25 மார்ச் 2026, 2:59 pm

நடப்பு சீசனில் (ஐபிஎல் 2026) இம்பாக்ட் பிளேயர் விதி நீடிக்குமா என்பது தொடர்பாக அனைத்து ஐபிஎல் அணிகளின் கேப்டன்களுடன் பிசிசிஐ ஆலோசனை நடத்தியுள்ளது.

ஐபிஎல் கேப்டன்கள் குழப்பமான பதிலை அளித்துள்ளதால், அது தொடர்பான முடிவை இப்போதைக்கு எடுக்கப்போவதில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளன.

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் மார்ச். 28ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் முதல்கட்டமாக 20 ஐபிஎல் போட்டிகள் ஏப்.12 வரை நடத்த திட்டமிட்டுள்ளன.

கடந்த 2023 முதல் இம்பாக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டது. போட்டியின் எதாவது ஒரு கட்டத்தில் ஒரு வீரரை இரு அணியினர் தேர்வு செய்துகொள்ள இந்த விதி அனுமதிக்கிறது.

இந்த விதியினார் ஆல்ரவுண்டர்களுக்கான தேவை குறைவதாக, பலரும் கருத்து தெரிவித்தார்கள். தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்‌ஷர் படேல் இந்த விதிக்கு எதிராக பேசினார். முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவும் இதற்கு எதிராகப் பேசியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடைபெற்ற ஐபிஎல் கேப்டன்களுடனான ஆலோசனையில் மாறுபட்ட கருத்துகள் பெறப்பட்டுள்ளன. பல கேப்டன்கள் இந்த விதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதால், பிசிசிஐ இந்த சீசனில் எந்த முடிவையும் எடுக்காது என பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த இம்பாக்ட் பிளேயர் விதி 2027 வரை இருக்குமென ஏற்கெனவே கூறியிருப்பதால், இந்த சீசனில் மாற்றம் இருக்காதென எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்த விதி இல்லாமல் இருப்பதால், ஆல் ரவுண்டர்களுக்கான தேவை குறையுமென்பதாலும் வருங்காலத்தை முன்னிட்டு இந்த விதியை நீக்க வாய்ப்பிருப்பதாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Summary

Majority of IPL captains express reservations on contentious Impact Player rule.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.