கபுனி என்னும் செயற்கை நுண்ணறிவு கிரிக்கெட் தொழில்நுட்ப தளத்தின் சூப்பர் பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் வெள்ளிக்கிழமை இணைந்துள்ளார்.
இந்த தளத்தின் சூப்பர் பயிற்சியாளராக ஏற்கெனவே, செளரவ் கங்குலி, ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் ஷேன் வாட்ஸன் ஆகியோர் உள்ள நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரும் இந்த வரிசையில் இணைந்துள்ளார்.
கபுனி என்பது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, விளையாட்டு வீரர்களின் நகர்வுகள் மற்றும் விளையாடும்போது பந்து வரும் வேகம் ஆகியவற்றைக் கண்காணித்து, அவற்றைக் குரல், காணொளி மற்றும் காட்சி வழிகாட்டுதல் மூலம் பதிவு செய்கிறது. பிறகு, அதனை வீரரின் ஆட்டத்தை மேம்படுத்தும் வகையில் பின்னூட்டமாக வழங்குகிறது.
மேலும், உயிரியல் இயக்கவியல் மற்றும் இயக்கக் கண்காணிப்பைப் பயன்படுத்தி, பயிற்சி முறைகளை ஆட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள வீரர்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தேச அளவில் ”ஜாம்பவானுக்காக விளையாட விரும்புகிறீர்களா?" என்ற பெயரில், 12 முதல் 16 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்காக கபுனி சார்பில் இந்த மாதம் போட்டி நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Indian cricketer Shreyas Iyer joined the AI-powered cricket technology platform 'Kabuni' as a 'Super Coach' on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

100-ஆவது ஐபிஎல் போட்டியில் கேப்டனாக விளையாடும் ஷ்ரேயாஸ் ஐயர்..! தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 211 ரன்கள் இலக்கு!








