/

3-வது டி20: இந்தியா பந்துவீச்சு; தொடரைக் கைப்பற்றுமா?

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

News image
- படம் | பிசிசிஐ
Updated On :25 ஜனவரி 2026, 1:10 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி குவாஹாட்டியில் இன்று (ஜனவரி 25) நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்கிறது.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவி பிஷ்னோய் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து அணியில் ஸகாரி ஃபோல்க்ஸுக்குப் பதிலாக கைல் ஜேமிசன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.