இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து கவலைப்படுபவர்களை நினைத்து தான் கவலைப்படுவதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்தது இன்று (பிப்ரவரி 21) முதல் சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகள் தொடங்குகின்றன.
கொழும்பின் பிரேமதேசா திடலில் இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி அதன் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை நாளை (பிப்ரவரி 22) எதிர்கொள்கிறது.

அபிஷேக் சர்மா - படம் | AP
இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து கூறவேண்டுமென்றால், அபிஷேக்கின் ஃபார்ம் குறித்து கவலைப்படுபவர்களை நினைத்து எனக்கு கவலையாக உள்ளது. அவர்கள் ஏன் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டும். கடந்த ஆண்டு அதிரடியாக விளையாடி அணியில் உள்ள வீரர்கள் அனைவரையும் அபிஷேக் பாதுகாத்தார். ஒரு அணியாக அவரைப் பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை.
உலகக் கோப்பைத் தொடரில் அபிஷேக் சர்மா அவரது ரன் கணக்கை இன்னும் தொடங்கவில்லை. அவர் ரன் கணக்கைத் தொடங்கி விட்டால், என்ன நடக்கும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் அதிரடியாக விளையாடினால், எப்படி இருக்கும் என்பதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.
அதிரடியாக விளையாடும் அவரது அடையாளத்தை அபிஷேக் சர்மா ஒருபோதும் இழக்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. அவரது அதிரடியான ஆட்டம் அணிக்கு தேவைப்படுகிறது.. அதிரடியாக விளையாடும் முயற்சியில் அவர் ஆட்டமிழந்தால், ரன்கள் குவிக்க அடுத்தடுத்த இடங்களில் நாங்கள் இருக்கிறோம் என்றார்.
அதிரடி ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.
Summary
Captain Suryakumar Yadav has given a humorous response to those concerned about the form of Indian opener Abhishek Sharma.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் என்ன?

அர்ஷ்தீப் சிங் செய்த தவறுக்காக நியூசிலாந்து வீரரிடம் மன்னிப்பு கேட்ட இந்திய கேப்டன்!

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேனா? டி20 கேப்டன் சூர்யகுமார் பதில்!

மற்றவர்கள் நினைப்பது முக்கியமல்ல, அதிரடியாக விளையாடுங்கள்; அபிஷேக் சர்மாவுக்கு கம்பீர் ஆதரவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



