/

உலகக் கோப்பைத் தொடரிலிருந்து இலங்கை வேகப் பந்துவீச்சாளர் விலகல்; மாற்று வீரர் அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஈஷன் மலிங்கா காயம் காரணமாக விலகியுள்ளார்.

News image
- படம் | ஐசிசி
Updated On :7 பிப்ரவரி 2026, 12:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஈஷன் மலிங்கா காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசன் இன்று (பிப்ரவரி 7) தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் நாளான இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. மும்பை வான்கடே திடலில் நடைபெறவுள்ள மூன்றாவது போட்டியில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

கொழும்புவில் நாளை (பிப்ரவரி 8) நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதவுள்ளன.

ஈஷன் மலிங்கா விலகல்

தனது முதல் போட்டியில் நாளை விளையாடவுள்ள நிலையில், இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஈஷன் மலிங்கா தோள்பட்டை காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

காயம் காரணமாக விலகியுள்ள அவருக்குப் பதிலாக பிரமோத் மதுஷன் மாற்று வீரராக இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மிதவேகப் பந்துவீச்சாளரான பிரமோத் மதுஷன் இலங்கை அணிக்காக இதுவரை 13 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது, ஈஷன் மலிங்காவுக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.