சதங்கள் விளாசுவது மிகவும் எளிது என்பதைப் போல அபிஷேக் சர்மா சதம் விளாசுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஸ்வர் புஜாரா அவரைப் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 68 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசிய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அபிஷேக் சர்மா மிகவும் சிறப்பான திறமை கொண்டவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஸ்வர் புஜாரா அவரைப் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக சதம் விளாசியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் மிகவும் எளிதாக சதங்கள் விளாசுகிறார். அவர் ரன்கள் குவிப்பது சன்ரைசர்ஸ் அணிக்கு மிகவும் முக்கியம். ஏனெனில், அவர் ரன்கள் குவிக்கும்போது அணி வெற்றி பெறுகிறது. அவர் மிகவும் சிறப்பான திறமை கொண்ட வீரர். வெகு சில பேட்டர்களிடத்திலேயே அபிஷேக் சர்மா போன்று சிறப்பான திறமை உள்ளது என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் சர்மா, 323 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Former Indian cricketer Cheteshwar Pujara has praised Abhishek Sharma, remarking that he scores centuries as if it were an effortless task.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒரே நாளில் பல சாதனைகளை நிகழ்த்திய அபிஷேக் சர்மா..! டி20 கிரிக்கெட்டின் நாயகன்!

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை பாராட்டிய புஜாரா!

சன்ரைசர்ஸ் அணியின் துணை கேப்டன் அபிஷேக் சர்மாவுக்கு 25% அபராதம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



