தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

வருத்தமாக இருக்கிறது..! ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய ஆயுஷ் மாத்ரேவின் பதிவு!

சிஎஸ்கேவின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவின் இன்ஸ்டா பதிவு குறித்து...

News image

ஆயுஷ் மாத்ரே பகிர்ந்த புகைப்படங்கள். - படங்கள்: இன்ஸ்டா / ஆயுஷ் மாத்ரே.

Updated On :22 ஏப்ரல் 2026, 10:48 am

சிஎஸ்கேவின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த சீசனில் இருந்து விலகியது குறித்து மிகவும் வருத்தமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து காயம் காரணமாக ஆயுஷ் மாத்ரே விலகியுள்ளார். இடது தொடையில் ஏற்பட்ட தசைக் கிழிவினால் அவருக்கு 8-12 வாரங்கள் ஓய்வு தேவைப் படுவதாக மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரன் ஓடும்போது ஆயுஷ் மாத்ரேவுக்கு இந்தக் காயம் ஏற்பட்டது. இந்த சீசனில் 6 போட்டிகளில் 201 ரன்களை 177.88 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி எடுத்துள்ளார்.

சிஎஸ்கே அணி நாளைக்கு மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், ஆயுஷ் மாத்ரே தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஐபிஎல் 2026 சீசனில் சிஎஸ்கே அணிக்காக பங்காற்ற முடியவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால், நிச்சயமாக, பலமாக திரும்ப வருவேன். இந்த சீசனில் மீதமுள்ள போட்டிகளுக்காக அணிக்கு வாழ்த்துகள். மஞ்சள் நிறத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.

Summary

Ayush Mhatre says disappointment to ruled out of ipl 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.