மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஐபிஎல் தொடரிலிருந்து ஆயுஷ் மாத்ரே விலகல்; சிஎஸ்கேவுக்கு சிக்கல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

News image

ஆயுஷ் மாத்ரே - படம் | சென்னை சூப்பர் கிங்ஸ் (எக்ஸ்)

Updated On :21 ஏப்ரல் 2026, 10:22 am

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த சிஎஸ்கே, அதன் பின் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. ஹைதராபாதில் நடைபெற்ற கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதிடம் சிஎஸ்கே தோல்வியடைந்தது.

ஹைதராபாதுக்கு எதிரான கடந்த போட்டியின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அவர் அடுத்தப் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து ஆயுஷ் மாத்ரே விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக ஆயுஷ் மாத்ரே விலகியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸுக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், 6 போட்டிகளில் 201 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆயுஷ் மாத்ரே விலகியது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமாக 6-லிருந்து 12 வாரங்கள் தேவைப்படும். அவர் விரைவில் குணமடைய விரும்புகிறோம் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் அடுத்தப் போட்டியில் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Summary

Chennai Super Kings player Ayush Mhatre has been ruled out of the remaining matches of the IPL tournament due to injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.