மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அசத்தும் முன்னாள் சிஎஸ்கே வீரர்கள்..! ஏலத்தில் எடுக்காத பயிற்சியாளரை விமர்சிக்கும் ரசிகர்கள்!

ஐபிஎல் 2026 சீசனில் அசத்தும் முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் குறித்து...

News image

இங்கிடி, தேஷ்பாண்டே, சமீர் ரிஸ்வி. - படங்கள்: ஏபி

Updated On :5 ஏப்ரல் 2026, 5:58 am

ஐபிஎல் 2026 சீசனில் முன்னாள் இளம் சிஎஸ்கே வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களை எல்லாம் ஏன் ஏலத்தில் எடுக்கவில்லை என சிஎஸ்கே ரசிகர்கள் தலைமைப் பயிற்சியாளரை சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

சிஎஸ்கே அணி தனது முதலிரண்டு போட்டிகளில் தோல்வியுற்று, மூன்றாவது போட்டியில் இன்றிரவு ஆர்சிபியை அதன் சொந்த மண்ணில் மோதுகிறது.

நடப்பு சீசனில் தில்லி அணியில் விளையாடும் சமீர் ரிஸ்வி 2 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி 2 ஆட்ட நாயகன் விருதுகள் வென்றுள்ளார். முன்னதாக, அவர் சிஎஸ்கே அணியில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார்.

அதேபோல, துஷார் தேஷ்பாண்டே, லுங்கி இங்கிடி, தீபக் சஹார் ஆகியோர் மிரட்டலாக பந்துவீசி வருகிறார்கள். இவர்களும் முன்னதாக சிஎஸ்கே அணியில் இருந்து பல திறன்களை வளர்த்தும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாதிரியான திறமைசாலிகளை ஏலத்தில் எடுக்காமல் விட்டது ஏன் என சிஎஸ்கே ரசிகர்கள் ஸ்டீஃபன் ஃபிளெமிங்கை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.