தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்த இந்திய அணி!

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்துள்ளது.

News image
முகமது ஷமி- படம் | AP
Updated On :9 மார்ச் 2025, 1:50 pm

DIN

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 251 ரன்கள் குவித்தது. 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

ஃபீல்டிங்கில் மோசமான சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணி வீரர்கள் கொடுத்த 4 கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டது. இதன் மூலம், நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தவறவிட்ட கேட்ச்சுகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு அணி தவறவிட்ட அதிகபட்ச கேட்ச் எண்ணிக்கை இதுவாகும்.

மொத்தம் எட்டு அணிகள் பங்குபெற்ற இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேட்ச்சுகளை தவறவிடுவதன் அடிப்படையில், இந்திய அணி 3-வது இடத்தில் உள்ளது. ஃபீல்டிங்கில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை விட மட்டுமே இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது.

இன்றையப் போட்டியில் ரச்சின் ரவீந்திரா கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை இந்திய அணி தவறவிட்டது. முதல் முறை கிடைத்த கேட்ச் வாய்ப்பை முகமது ஷமி தவறவிட்டார். அதன் பின், கிடைத்த இரண்டாவது வாய்ப்பை ஸ்ரேயாஸ் ஐயர் தவறவிட்டார். டேரில் மிட்செல் கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பினை கேப்டன் ரோஹித் சர்மா தவறவிட்டார். கிளன் பிலிப்ஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பினை துணைக் கேப்டன் ஷுப்மன் கில் தவறவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.