பாகிஸ்தான் அணியின் உதவிப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அஸார் மஹ்முத், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர்களாக ஜேசன் கில்லெஸ்பி மற்றும் கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டபோது, பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான அஸார் மஹ்முத் அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவிக்காலம் நிறைவடையும் முன்பே, கேரி கிறிஸ்டன் மற்றும் ஜேசன் கில்லெஸ்பி இருவரும் அவர்களது தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினர்.
இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக அஸார் மஹ்முத் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இந்த பொறுப்பில் அவர் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக அஸார் மஹ்முத் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய பதவிக்காலம் முடியும் வரை தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் தொடர்வார். அணியின் உதவிப் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளதால், பாகிஸ்தான் அணி குறித்து அவருக்கு நன்றாக தெரியும். அவருடைய பரந்த அனுபவம் பாகிஸ்தான் அணிக்கு மிகுந்த உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 வயதாகும் அஸார் மஹ்முத் பாகிஸ்தான் அணிக்காக 21 டெஸ்ட் மற்றும் 143 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Former all-rounder Azhar Mahmood was on Monday elevated to the post of Pakistan's acting red-ball head coach until the conclusion of his current contract, which runs until April next year.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளையாட்டு துளிகள்...

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!

பாகிஸ்தான் அணிக்கு இளம் தலைமைப் பயிற்சியாளர் நியமனம்?
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


