ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

யு-19 முதல் ஒருநாள் போட்டி: 174 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழப்பு!

இந்தியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image

படம் | பிசிசிஐ

Updated On :27 ஜூன் 2025, 1:31 pm

இந்தியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

19 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜூன் 27) நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 42.2 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் ராக்கி ஃபிலிண்டாஃப் 56 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஐசக் முகமது 42 ரன்களும், பென் டாக்கின்ஸ் 18 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் கனிஷ்க் சௌகான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஹெனில் படேல், அம்பிரிஷ் மற்றும் முகமது தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.

summary

England were bowled out for 174 in the first match of the Under-19 ODI series against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.