இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இல்லை. இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து இந்திய அணி வீரர்கள் 5 சதங்களை விளாசினர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கத் தவறினர்.
அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர்
வருகிற ஜூலை 2 ஆம் தேதி முதல் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஜோஃப்ரா ஆர்ச்சர், மீண்டும் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளார். அவர் கடைசியாக இந்தியாவுக்கு எதிராக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அகமதாபாதில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் பந்துவீச்சு சராசரியாக இருந்த நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது இங்கிலாந்து அணிக்கு பலம் சேர்த்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஆலி போப் (துணைக் கேப்டன்), ஹாரி ப்ரூக், ஜோ ரூட், பென் டக்கெட், ஸாக் கிராலி, ஜேமி ஸ்மித், சாம் குக், ஜேக்கோப் பெத்தேல், ஜோஃப்ரா ஆர்ச்சர், சோயப் பஷீர், பிரைடான் கார்ஸ், ஜேமி ஓவர்டான், ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ்.
summary
England on Thursday added fast bowler Jofra Archer to their squad for the second Test against India, starting here from July 2.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜடேஜா, ஆர்ச்சர், பிரிஜேஷ் அசத்தல்: லக்னௌவை வீழ்த்தியது ராஜஸ்தான்

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்: இந்திய அணியில் இரு தமிழா்கள்

ஷேன் வாட்சனின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


