இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்தார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 471 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில், துணைக் கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மூவரும் சதம் விளாசி அசத்தினர். கே.எல்.ராகுல் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தோனியின் சாதனை முறியடிப்பு
முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 178 பந்துகளில் 134 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
முதல் இன்னிங்ஸில் சதம் விளாசியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இந்திய அணிக்காக அதிக சதங்கள் விளாசியுள்ள முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மகேந்திர சிங் தோனி 6 சதங்கள் விளாசியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 7-வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், தோனியின் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்துள்ள விக்கெட் கீப்பர்கள் வரிசையில் இரண்டு சதங்களுடன் விருத்திமான் சஹா மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த், 3082 ரன்கள் குவித்துள்ளார். அதில் 7 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் அடங்கும்.
இதுவரை இந்திய அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 4876 ரன்கள் குவித்துள்ளார். அதில் 6 சதங்கள் மற்றும் 33 அரைசதங்கள் அடங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆயுஷ் பதோனியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது ஏன்? ரிஷப் பந்த் விளக்கம்!

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

ரிஷப் பந்த் பொறுப்புடன் விளையாட வேண்டும்: முகமது கைஃப்

தொடக்க வீரராக தொடர்வேனா? ரிஷப் பந்த் பேட்டி!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


