தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

துபையில் மட்டுமே விளையாடும் இந்தியாவின் ஆதாயம் தெரிய ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை!

தெ.ஆ.வீரர் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவின் ஆதாயாம் குறித்து விமர்சித்துள்ளார்.

News image
வான் டர் டுசென் - படம்: ஏபி
Updated On :28 பிப்ரவரி 2025, 5:05 am

DIN

துபையில் மட்டுமே விளையாடும் இந்தியாவுக்கு எவ்வளவு சாம்பியன்ஸ் டிராபியில் எவ்வளவு சாதகம் எனத் தெரிய ஒருவர் ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை என தென்னாப்பிரிக்க வீரர் வான் டர் டுசென் கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. ஆனால், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடைபெறுகின்றன.

மற்ற அணிகள் இந்தியாவுடன் விளையாட வேண்டுமெனில் 2 இடங்களில் விளையாட வேண்டும். அதற்கேற்ப அணிகளை தயார் செய்ய வேண்டும். ஆனால், இந்தியாவுக்கு அந்தப் பிரச்னை இல்லை. இது முற்றிலும் விளையாட்டு உணர்வுக்கு எதிரானதென பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தென்னாப்பிரிக்க வீரர் வான் டர் டுசென் கூறியதாவது:

இந்தியாவுக்கு மிகவும் ஆதாயனது. இது குறித்து பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்ததைப் பார்த்தேன். ஆனால், இது நிச்சயமாக இந்தியாவுக்கு ஆதாயாம்தான்.

ஒரே இடத்தில் தங்கி, ஒரே விடுதியில் இருந்து ஒரேமாதிரி வசதிகள் உடன் பயிற்சி செய்தல், ஒரே திடல், ஒரே பிட்சில் விளையாடுவது நிச்சயமாக இந்தியாவுக்கு ஆதாயம்தான்.

இதைத் தெரிந்துகொள்ள ஒருவர் ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை. அந்த ஆதாயத்தைப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு அவர்கள் மீது இருக்கும். இதற்கு அர்த்தம் அவர்களுக்கு அது கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும். ஏனெனில் இது இந்திய வீரர்களுக்கும் தெரியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.