தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

40 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் போட்டி!

ஜம்மு காஷ்மீரில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விளையாட்டு வீரர்களின் கிரிக்கெட் போட்டி நடைபெறவிருக்கிறது.

News image

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்

Updated On :28 ஆகஸ்ட் 2024, 11:12 am

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீ நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பக்‌ஷி மைதானத்தில் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டி நடைபெறவிருக்கிறது. இந்தியர்கள், சர்வதேச வீரர்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் விளையாடவிருக்கிறார்கள்.

செப்.20ஆம் தேதி எல்.எல்.சி (லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்) கிரிக்கெட் போட்டி பார்கட்டுல்லாஹ் கான் மைதானத்தில் தொடங்குகிறது.

ஜம்மு காஷ்மீரில் சரியாக 38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. 200க்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

ஜோத்பூர், சூரத், ஜம்மு, ஸ்ரீ நகர் ஆகிய 4 முக்கிய நகரங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

கடைசியாக ஸ்ரீ நகரில் 1986ஆம் ஆண்டு சரவதேச ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவுடன் மோதிய ஆஸ்திரேலிய 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் மொத்தம் 25 ஆட்டங்கள் நடைபெறும். 6 அணிகளுக்கு நடைபெறும் போட்டிகளில் புள்ளி அடிப்படையில் முதலில் வரும் 2 அணிகள் இறுதிப் போட்டியில் அக்.16ஆம் தேதி ஸ்ரீ நகரில் விளையாடவிருக்கிறது.

ஜோத்பூரில் செப்.20ஆம் தேதி இந்தப் போட்டிகள் துவங்குகின்றன. ஜம்மு காஷ்மீர் மக்கள் போட்டியை நேரடியாக பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள்.

”லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டினை அடுத்த சீசனும் வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் காஷ்மீரில் விளையாடுவது மிகவும் ஆர்வமாக இருக்கிறது. கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் மக்கள் நேரடியாக கிரிக்கெட் போட்டியை அவர்கள் மண்ணில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் இது கிரிக்கெட் வீரர்களுக்கு காஷ்மீரின் அழகையும் அந்த மக்களின் அன்பையும் விருந்தோம்பலையும் அனுபவிக்கவிருக்கிறார்கள்” என லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின் இணை நிறுவனர் ராமன் ரஹேஜா கூறியுள்ளார்.

கடந்த சீசனில் சுரேஷ் ரெய்னா, ஆரோன் பின்ச், மார்டின் கப்டில், கௌதம் கம்பீர், கிறிஸ் கெயில், ஆசிம் அம்லா, ராஸ் டெய்லர் என 110 லெஜண்டரி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றார்கள்.

இந்த சீசனுக்கான ஏலம் நாளை (ஆக.29) தில்லியில் நடைபெறவிருக்கிறது. இந்தியா, சர்வதேச நட்சத்திர வீரர்கள் என 200க்கும் அதிகமான பேர் இதில் பங்குபெறவுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.