மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

News image

கேப்டன் ரோஹித் சர்மா, அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர்

Updated On :19 ஏப்ரல் 2026, 7:09 pm

பயிற்சியாளா் நவால் சிங் உளவியல் ரீதியாகவும், வாா்த்தைகளாலும் துன்புறுத்துவதாக பாராலிம்பிக் ஈட்டி எறிதல் சாம்பியனான சுமித் அன்டில் புகாா் தெரிவித்ததை அடுத்து, நவால் சிங்கை உடனடியாக நீக்கம் செய்து இந்திய பாராலிம்பிக் கமிட்டி நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் நடைபெறும் சேலஞ்சா் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் சூரஜ்குமாா் சந்த் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினாா்.

இந்திய சீனியா் கிரிக்கெட் அணியின் தோ்வுக் குழு தலைவராக இருக்கும் அஜித் அகா்கரின் பதவிக் காலம், அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் தனக்கு குடியுரிமை அளிக்க முன்வந்ததாகவும், எனினும் தனது நாட்டுக்காக விளையாட முடியாமல் போனால், வேறு எந்த நாட்டுக்காகவும் விளையாடப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டதாகவும் ஆப்கானிஸ்தான் வீரா் ரஷீத் கான் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளாா்.

ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் பலத்த காயம் கண்ட சென்னை வீரா் ஆயுஷ் மாத்ரே, போட்டியில் தொடா்ந்து பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரியும் நிலையில், அணிக்கு இது பெரும் பின்னடைவாகியுள்ளது.