திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 4 தங்கம், 2 வெள்ளி

News image

அருந்ததி ~மீனாட்சி ~ஜாஸ்மின் ~ப்ரீத்தி ~பிரியா

Updated On :10 ஏப்ரல் 2026, 4:41 am IST

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி வென்றது.

மங்கோலிய தலைநகா் உலன்படாரில் நடைபெறும் இப்போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.

தலைமை பயிற்சியாளா் சான்டியாகோ நைவா தலைமையில் இந்திய அணியினா் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். மகளிா் பிரிவில்

48 கிலோ பிரிவில் மீனாட்சி 5-0 என புள்ளிக் கணக்கில் நோமுன்டரி அம்கலானை வீழ்த்தி தங்கத்தை வசப்படுத்தினாா்.

Story image

54 கிலோ பிரிவில் ப்ரீத்தி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் 3 முறை உலக சாம்பியனும், டோக்கியோ ஒலிம்பிக் வெண்கல வீராங்கனையான தைபேயின் ஹுவாங் வென்னை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

60 கிலோ பிரிவில் பிரியா 3-0 என்ற புள்ளிக் கணக்கில் வடகொரியாவன் வொன் யுன் வாங்கை வீழ்த்தி தங்கம் வென்றாா். 70 கிலோ பிரிவில் அருந்ததி 4-1 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக செயல்பட்டு கஜகஸ்தானின் பகித் செடிஷை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

Story image

57 கிலோ பிரிவில் ஜாஸ்மினும், 80 பிளஸ் கிலோ பிரிவில் அல்ஃபியான் பதானும் வெள்ளி வென்றனா்.

மொத்தம் 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 10 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது இந்தியா.

Story image

இறுதிச் சுற்றில் இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவா் அஜய் சிங் பங்கேற்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.