நான் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக இருக்கிறேன் என்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பதிவு வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இடையே நேற்றிரவு நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த தொடரின் முதல் வெற்றியை டெல்லியும், முதல் தோல்வியை சென்னை அணியும் பதிவு செய்தன.
இருப்பினும், இந்த ஆட்டத்தில் இரு சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறின. விபத்தில் இருந்து மீண்டும் விளையாட தொடங்கியுள்ள டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் அரைசதம் விளாசி ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்தார்.
மற்றொன்று மகேந்திர சிங் தோனி. 43 வயதாகும் தோனி, தான் தொடக்க காலத்தில் வைத்திருந்த ஹேர் ஸ்டைலுடன் களத்தில் அதிரடியாக ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
கடந்த இரண்டு போட்டிகளில் தோனியின் ஆட்டத்தை பார்க்க ஏங்கியிருந்த ரசிகர்களுக்கு நேற்று விருந்து அளித்தார் தோனி.
8-வது வீரராக களத்துக்கு வந்த தோனி, 3 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் விளாசி 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். கடைசி பந்தை சிக்ஸர் அடித்தது கூடுதல் சிறப்பு.
இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை என்றாலும், பெரிய தோல்வியில் இருந்து தப்பித்து ரன்ரேட்டை தக்க வைத்துள்ளது.
அதிரடி ஆட்டக்காரருக்கான ‘எலக்ட்ரிக் ஸ்டிரைக்கர்’ விருது தோனிக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு எக்ஸ் தளத்தில் தோனி வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது முக்கியமல்ல. நான் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக இருக்கிறேன்.” என்று பதிவிட்டிருந்தார் தோனி.
தொடக்க கால ஹேர் ஸ்டைலுடன் வலம் வரும் தோனி, அதேபோன்று அதிரடியாக விளையாடுவாரா என்ற கேள்விக்கு, நேற்றைய ஆட்டத்தில் தோனி பதிலளித்துவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீப்பிங் பயிற்சியில் எம்.எஸ். தோனி..! மும்பைக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?
இது தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம்: ராபின் உத்தப்பா
மஞ்சள் ஜெர்சியில் இது தோனிக்கு கடைசி சீசனாக இருக்கலாம்: இர்பான் பதான்

தோனிக்கு ரூ. 1,000 அபராதம் விதித்த காவல்துறை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



