முதல் ஐபிஎல் போட்டியைத் தவறவிடும் சுரேஷ் ரெய்னா!
இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, தனது நீண்ட நாள் தோழியான பிரியங்கா செளத்ரியை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார். இந்நிலையில் மனைவியின் பிரசவத்தின்போது அருகில் இருந்து கவனித்துக்கொள்வதற்காக நெதர்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார் சுரேஷ் ரெய்னா. இதனால் நீண்டநாளாக உள்ள ஒரு சாதனை முறியவுள்ளது.










