நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

டி20: கொல்கத்தாவில் மழை! சிக்கலில் இந்திய அணி!

டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 10 பிரிவில், இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று காலையில் கொல்கத்தா பலத்த மழை பெய்ததால் ஆட்டம் நடைபெறுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:49 pm

சநகன்

டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 10 பிரிவில், இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று காலையில் கொல்கத்தாவில் பலத்த மழை பெய்ததால் ஆட்டம் நடைபெறுவது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆட்டமானது, இந்திய அணிக்கு முக்கியமான ஒன்று. சொந்த மண்ணில் முதல் ஆட்டத்திலேயே நியூஸிலாந்திடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது. ஒருவேளை இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வி அடைந்தால், போட்டியிலிருந்து வெளியேறுகிற சூழலும் ஏற்படலாம்.

இந்நிலையில் காலையில் கொல்கத்தாவில் பலத்த மழை பெய்ததால் இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முதலில் இன்றைக்கு மழை எதுவும் பெய்யாது என்று வானிலை அறிக்கையில் கூறப்பட்டாலும் நிலைமை வேறாக இருந்தது. காலை 6 மணி முதல் மேகமூட்டமாக இருந்து, பிறகு காலை 9 மணியின்போது பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்ததால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அச்சம் அடைந்துள்ளார்கள்.

இந்த டி20 உலகக் கோப்பை போட்டியிலும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 4 ஆட்டங்கள் ஆடவேண்டும். இதில் குறைந்தபட்சம் 3 போட்டிகளில் ஜெயித்தால் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெறமுடியும். 2014-ல் வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியிலும் குறைந்தபட்சம் 3 போட்டிகளில் வென்ற அணிகளே அரையிறுதிக்குத் தகுதி பெற்றன (இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை, தென் ஆப்பிரிக்கா). இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்ற பாகிஸ்தானும் நியூசிலாந்தும் தகுதிபெறமுடியாமல் போயின.

அதுபோல இந்த உலகக்கோப்பையிலும் அதே நிலையே நீடிக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளதால் மீதமுள்ள 3 போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Story image

ஈடன் கார்டன்ஸ் மைதானத்தின் வடிகால் வசதிகள் சுமாரான தரத்துடன் உள்ளதால் அதையும் கணக்கில் கொள்ளவேண்டியதாக உள்ளது. இன்றைய ஆட்டம் 7.30 மணிக்குத் தொடங்குவதாக உள்ளது. அதுவரை மழை பெய்யாமல் இருந்தால் ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் இருக்காது. ஆனால் ஆட்ட நேரத்தின்போது மழை பெய்தால் நிச்சயம் ஆட்டம் கைவிடப்படக்கூடிய அபாயம் உள்ளது. அதனால் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், மாலை வேளையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கொல்கத்தா வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.