நிதிப் பற்றாக்குறையால் ஆடுகளம் அமைப்பதில் தாமதம்
திண்டுக்கல்லில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் 2-ஆவது பெரிய உள்விளையாட்டு அரங்கில் நிதிப் பற்றாக்குறையால் மரத்தளத்தினாலான ஆடுகளம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிமுடிக்கப்பட்டு 8 மாதங்களாகியும் விளையாட்டு அரங்கத்தை பயன்படுத்த முடியாமல் வீரர்கள் தவித்து வருகின்றனர்.










