எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இந்திய கிரிக்கெட் வீரர்களை இழிவுபடுத்திய வங்கதேச நாளிதழ்!

இதற்கு வங்கதேச ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:52 am

எழில்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை வெற்றி கண்டது வங்கதேச அணி. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர்களை இழிவுபடுத்தி வங்கதேச நாளிதழ் ஒன்று புகைப்படம் வெளியிட்டுள்ளது.

வங்கதேச நாளிதழான புரோதோம் ஆலோ, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானின் ஆஃப் கட்டர்களில் இந்திய அணி வீழ்ந்ததை கேலி செய்யும் விதமாக ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களான தோனி, கோலி, ரஹானே, ரோஹித் சர்மா, ஜடேஜா, ஷிகர் தவண், அஸ்வின் ஆகியோர் அரை வழுக்கையுடன் அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்திய வீரர்களுக்கு மேலே முஸ்தாபிசுர் கையில் கத்தியுடன் உள்ளதால் அவரால் இந்திய வீரர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நாளிதழ் குறிப்பிடுகிறது. நாங்கள் அதைப் பயன்படுத்திவிட்டோம், நீங்களும் பயன்படுத்தலாமே என்கிற வாசகம் கொண்ட பேனரை இந்திய வீரர்கள் கையில் பிடித்துள்ளார்கள்.

புரோதோம் ஆலோ தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இப்புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு வங்கதேச ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.