லோதா தலைமையிலான விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீதான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. லோதா குழுவின் அறிக்கையில் இன்று கூறியபடி, ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க இந்தியா சிமெண்ட்ஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ்) மற்றும் ஜெய்ப்பூர் ஐபிஎல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஐபிஎல்-லில் இரு புது அணிகளைச் சேர்ப்பது குறித்து பிசிசிஐ விவாதித்து வருகிறது. 2016 ஐபிஎல் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்:
1) தடை விதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்குப் புதிய உரிமையாளர்களை நிர்ணயிப்பது. எனில், இந்தியா சிமெண்ட்ஸ், ஜெய்ப்பூர் ஐபிஎல் நிறுவனங்கள் ஐபிஎல்-லில் இருந்து நீக்கப்படவேண்டும். இதனால் சூதாட்டப் புகார் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுத்ததாக பிசிசிஐக்குப் பாராட்டுகள் கிடைக்கும். சென்னை, ராஜஸ்தான் ரசிகர்களுக்கும் ஏமாற்றம் ஏற்படாமல் இருக்கும்.
2) லோதா அறிவித்தபடி இரு அணிகளுக்கும் 2 ஆண்டுகள் தடை விதித்ததை உறுதிப்படுத்தலாம். ஆனால், அதன்பிறகு 6 அணிகளை மட்டும் கொண்டு ஐபிஎல்-ஐ நடத்தமுடியாது. எனவே புதிதாக 2 அணிகளைச் சேர்க்கலாம். 2 வருடங்கள் கழித்து சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீண்டும் ஐபிஎல்-லில் ஆடும்போது 10 அணிகள் கொண்ட அணியாக ஐபிஎல் இருக்கும்.
3) சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்குப் புதிய உரிமையாளர்களை நிர்ணயிப்பது, கூடுதலாக இரு அணிகளையும் ஐபிஎல்-லில் சேர்ப்பது. இதனால் 2016 ஐபிஎல்-லில் 10 அணிகள் பங்கேற்கும். பிசிசிஐக்கும் வருமானம் அதிகரிக்கும். அதிக வீரர்களை ஐபிஎல்-லில் ஈடுபடுத்தவும் முடியும்.
4) என்.சீனிவாசன் அணிக்குத் தடை கிடைத்திருப்பதால் அவரை ஐசிசி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யச் சொல்வது. பிசிசிஐயின் பிரதிநிதியாக ஐசிசி தலைவர் ஆகியிருப்பதால் பிசிசிஐ கட்டளையிட்டால் சீனிவாசனால் மறுக்கமுடியாது.
இதில் எந்த முடிவை பிசிசிஐ செயல்படுத்தபோகிறது என்பது விரைவில் தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

