சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மீண்டும் வருவோம்; படம் இன்னமும் மீதமுள்ளது - சிஎஸ்கே ‘சூசக’ அறிவிப்பு!

சிங்கங்களே நம்பிக்கையுடன் இருங்கள். நாம் மீண்டும் வருவோம்.  படம் இன்னமும் மீதமுள்ளது...

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:58 am

எழில்

முன்னாள் நீதிபதி லோதாவின் ஐபிஎல் சூதாட்டப் புகார் மீதான தீர்ப்பை அடுத்து சென்னை சூப்பர் அணியால் அடுத்த இரு ஆண்டுகளுக்கு ஐபிஎல்-லில் பங்கேற்கமுடியாது. இதுவரை இந்தியா சிமெண்ட்ஸ் அல்லது சென்னை அணி சார்பாக யாரும் எதுவும் தெரிவிக்காத நிலையில் சிஎஸ்கே அணியின் அதிகாரபூர்வ ட்விட்டரில் ஒரு தகவல் சூசகமாகச் சொல்லப்பட்டுள்ளது.

சென்னை ஐபிஎல் அணியின் மருத்துவர் டி.மது, லோதா தீர்ப்புக்குப் பிறகு ஒரு ட்வீட் செய்தார். சிங்கங்களே நம்பிக்கையுடன் இருங்கள். நாம் மீண்டும் வருவோம்.  படம் இன்னமும் மீதமுள்ளது என்று ட்வீட் செய்தார். அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் ஐடியால் உடனடியாக ரீட்விட் செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஐபிஎல்-லில் தொடர்ந்து பங்கேற்க இந்தியா சிமெண்ட்ஸ் ஆர்வத்துடன் உள்ளதாக அறிந்துகொள்ளலாம்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.