வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற 3 இந்தியர்களுக்கும் சச்சின் பாராட்டு!

விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற 3 இந்தியர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :13 ஜூலை 2015, 12:16 pm

விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற 3 இந்தியர்களுக்கும் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

விம்பிள்டன் கலப்பு இரட்டையர் போட்டியில் லியாண்டர் பெயஸ் - ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் பெயஸ் - ஹிங்கிஸ் ஜோடி, பெயா - பபோஸ் ஜோடியை 6-1, 6-1 என நேர் செட்களில் எளிதான முறையில் வெற்றி கண்டு விம்பிள்டன் பட்டத்தை வென்றது. 42 வயதான பெயஸுக்கு இது 16-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

ஜுனியர் விம்பிள்டன் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் - நாம் ஹோங்லி (வியட்நாம்) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் உள்ள சுமித் - ஹோங்லி ஜோடி, போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்திலுள்ள ரெய்லி ஓபெல்கா (அமெரிக்கா) - அகிரா சான்டில்லன் (ஜப்பான்) ஜோடியை எதிர்கொண்டது. இதில் சுமித் ஜோடி, 7-6(4), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. 17 வயதான சுமித் நாகல் புது தில்லியை சேர்ந்தவர் ஆவார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தார் இந்தியாவின் சானியா மிர்ஸா. விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, ரஷியாவின் எகர்டினா மகரோவா - எலீனா வெஸ்னினா ஜோடியை எதிர்கொண்டது. மொத்தத்தில் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் 5-7, 7-6 (7/4), 7-5 என்ற செட் கணக்குகளில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி வெற்றி பெற்று விம்பிள்டன் இரட்டையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் மகளிர் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாறு படைத்தார் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா.

இந்த மூன்று இந்தியர்களின் சாதனைகளுக்கும் தன்னுடைய ட்விட்டர் பக்கம் வழியாக  சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.