திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாகாளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா!

மாகாளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் பற்றி..

News image

மகா கும்பாபிஷேகம் - dps

Updated On :1 ஜூன் 2026, 12:23 pm IST

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமையான அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

மகா கும்பாபிஷேக பெருவிழா அறக்கட்டளை தலைவர் கே. சந்திரசேகரன் தலைமையிலும், செயலாளர் வழக்குரைஞர் ஜெயசந்திரன், பொருளாளர் வனவாசன், துணைத்தலைவர்கள் கோபாலகிருஷ்ணன் மற்றும் உதயகுமார் ஆகியோர் முன்னிலையிலும் விழா சிறப்பாக நடைபெற்றது.

பழமை மிக்க இந்த ஆலயத்தில் பல கட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய ராஜகோபுரம், கருவறை, கல் மண்டபம், வசந்த மண்டபம், ராஜராஜேஸ்வரி சிலை உள்ளிட்ட பல்வேறு புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் காலை 9.30 மணி முதல் 10.15 மணி வரை சுவாதி நட்சத்திர நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருப்பேரூராதீனம் மற்றும் சிரவை ஆதீன அடிகளார்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்கப் புனித நீர் கலசங்களிலிருந்து கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனை முன்னிட்டு கடந்த 27ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து தினமும் பக்தர்களுக்காக அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற பவளக்கொடி கும்மி ஆட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தன.

இந்த மகா கும்பாபிஷேக பெருவிழாவில் அன்னதானக்குழு பொறுப்பாளர்கள் தனலட்சுமி மோகன் சுந்தர், ஜெபராஜ் (அண்ணாச்சி) விழாக்குழுவினர், கௌரவ ஆலோசகர்கள், கோயில் பூசாரிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருளைப் பெற்றனர்.

The grand festival of the Maha Kumbabhishekam was celebrated with spiritual fervor at the centuries-old Arulmigu Mahakaliamman Temple, located near the Coimbatore District Collector's Office.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.