தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மகா தீபக் கொப்பரை!

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படும் மகா தீபத்துக்கான கொப்பரை சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. 

News image
Updated On :25 நவம்பர் 2023, 11:37 am

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படும் மகா தீபத்துக்கான கொப்பரை சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து விழாவின் 7-ஆம் நாள் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

விழாவின் சிகர நிகழ்வான மகா தீபம் நாளை நடைபெறுவதையொட்டி அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் ஸ்ரீஅருணாசலேஸ்வரா், மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. 

Story image

இதையடுத்து மகா தீபத்துக்கு ஏற்றப்படும் கொப்பரைக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் 20-க்கும் மேற்பட்டோர் மலை உச்சிக்கு மகா தீப கொப்பரையைத் தோளில் சுமந்து சென்றனர். 

பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட மகாதீப கொப்பரையில் 4,500 லிட்டர் நெய் மற்றும் 1,500 மீட்டர் காடா துணிகளைப் பயன்படுத்தி நாளை மாலை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. 

இந்த கொப்பரையை ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி பரவசத்துடன் வணங்கினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.