இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

திருப்பரங்குன்றத்தில் காா்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:50 pm

தினமணி

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், தங்ககுதிரை, காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

விழாவின் 8 ஆம் நாள் நிகழ்ச்சியாக டிச.5-ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு 8 மணிக்கு கோயில் 6 கால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு செங்கோல், சேவல்கொடியுடன் பட்டாபிஷேகம் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிச.6-ஆம் தேதி காலை 11 மணிக்கு காா்த்திகை தேரோட்டமும், மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.

முன்னதாக காா்த்திகை தீபத் திருவிழாவிற்கான தேங்காய் தொடு முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோயில் ஸ்தானிகப்பட்டா்கள் துணை ஆணையரிடம் சென்று திருவிழா விவரங்களை தெரிவித்துவிட்டு கோயில் கருப்பண சுவாமி சன்னதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.