/

ஆடி மாத பௌர்ணமி: சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல தடை!

ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 6:50 am

ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தா்கள் வழிபட, பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மாதத்தின் 8 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஆகஸ்ட் 11 ஆம் தேதி  பௌர்ணமியை முன்னிட்டு, ஆகஸ்ட் 9 ஆம்  தேதி முதல் பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி ஆகஸ்ட் 9 முதல் 12 ஆம் தேதி வரை 4 நாள்கள் சதுரகிரி கோயிலுக்குச் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனவே, பக்தா்கள் யாரும் கோயிலுக்கு வரவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.