லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

டாக்டர் அம்பேத்கர்; நாணக் சந்த், தமிழில்

நூலின் இவ்விரு பாகங்களிலும் பெரும்பகுதியாக இடம் பெற்றிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள், தீண்டாமை, ஹிந்து மதத் தத்துவம், புத்தம் தொடர்பான அம்பேத்கரின் எழுத்துகளும் உரைகளும் மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டியவை.

News image
Updated On :16 மார்ச் 2026, 12:06 pm

டாக்டர் அம்பேத்கர்; நாணக் சந்த், தமிழில்: கே. கிருஷ்ணகுமார், பாகம்-1; பக். 400; ரூ. 350; பாகம்-2; பக்.440; ரூ. 350; எஸ். பப்ளிகேஷன்ஸ், 41, மாருதி என்கிளேவ், வசந்தபுரம், மாங்காடு, சென்னை- 600122.

அம்பேத்கரின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றுடன் அவருடைய முக்கியமான எழுத்துகள், பேச்சுகள் இரு பாகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், தேவைப்படும் இடங்களில் பிற தலைவர்களின் கட்டுரைகள், பேச்சுகளும் இணைக்கப்பட்டுள்ளன.

வட்டமேஜை மாநாடு, மகாத்மாவின் உண்ணாவிரதம் குறித்தெல்லாம் விவாதிப்பதுடன் மகாத்மா காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான உரையாடலும் தரப்பட்டிருக்கிறது. அம்பேத்கரின் அரிய எழுத்துகளில் ஒன்றான தீண்டப்படாதோர் குறித்த தகவல்களுடன், சேரி வாழ்வோர், தீண்டப்படாதோர் உடைந்த மனிதர்களே எனப் பல்வேறு விஷயங்களும் குறிக்கப்பட்டுள்ளன.

மாட்டிறைச்சி, புத்த மதம் பற்றியெல்லாமும் இவற்றைப் பற்றிய அம்பேத்கரின் கருத்துகளுடன் கம்யூனிஸமும் புத்த மதமும் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையின் சுருக்கமும் இடம் பெற்றிருக்கிறது. இளையபெருமாள் கமிட்டி அறிக்கை, கீழவெண்மணி படுகொலை பற்றியெல்லாம் நினைவுகூருவதுடன், ஹரிஜனங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்; விவசாயத் தொழிலாளர் சட்டம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் காத்தமுத்து ஆற்றிய உரை முழுவதுமாகத் தரப்பட்டிருக்கிறது.

தலைமை வகிக்க அழைக்கப்பட்டுப் பின்னர் மறுக்கப்பட்ட லாகூர் ஜாத் பட் தோடக் மண்டலுக்காக தயாரித்த ஜாதி ஒழிப்பு குறித்த அம்பேத்கரின் உரை முழுவதுமாக நூலில் இடம் பெற்றிருக்கிறது.

ஹிந்து மதத் தத்துவமும் மனு தர்மமும் பற்றித் தெரிவிப்பதுடன் அம்பேத்கர் குறித்த கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ. டாங்கே, கோ. சாமிதுரை போன்றோரின் எழுத்துகளும் நூல்களின் பகுதிகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

நூலின் இவ்விரு பாகங்களிலும் பெரும்பகுதியாக இடம் பெற்றிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள், தீண்டாமை, ஹிந்து மதத் தத்துவம், புத்தம் தொடர்பான அம்பேத்கரின் எழுத்துகளும் உரைகளும் மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டியவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.