நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கடந்த நேரமும் நடந்த தூரமும் - சுயசரிதை

அறம் தவறாமல் வாழ வேண்டும் என்கிற எண்ணத்தை ஒரு சுயசரிதை ஏற்படுத்த முடியும். அதை உறுதியாகச் செய்திருக்கிறது நீதிபதி சிவராஜ் வி.பாட்டிலின் சுயசரிதை.

News image
- SWAMINATHAN
Updated On :3 பிப்ரவரி 2026, 7:38 am

தினமணி செய்திச் சேவை

கடந்த நேரமும் நடந்த தூரமும் - சுயசரிதை - நீதிநாயகம் சிவராஜ் வி.பாட்டில்; பக். 608; ரூ.800; நீதிபதி சிவராஜ் வி.பாட்டில் அறக்கட்டளை, மதுரை-625 020; ✆ 98434 60061.

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, இறுதியாக உச்சநீதிமன்ற நீதிபதி என்ற அளவில் உயர்ந்த நீதிபதி சிவராஜ் வி.பாட்டிலின் சுயசரிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு.

கர்நாடக மாநிலத்தில் மின் வசதி இல்லாத ஒரு கிராமத்தில் பிறந்து, தெரு லாந்தர் விளக்கு வெளிச்சத்திலும், மாட்டு வண்டியில் பயணித்தும் கல்வி பயின்று வாழ்வில் உயர்ந்த நீதிபதி சிவராஜ் வி.பாட்டிலின் அனுபவங்கள் ஓர் அறநெறி நூலுக்கு இணையானதாக உள்ளது.

அவரது அனுபவ அறிவுரைகளை அனைவரும் பின்பற்றினால் ஒரு பண்பான சமூகத்தை உருவாக்க முடியும்.

கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான இடஒதுக்கீட்டுப் பிரிவில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு ஒரு பெண்ணுக்கு வழிவகை செய்தது தொடர்பான தனது தீர்ப்பைச் சுட்டிக்காட்டும் நீதிபதி வி.பாட்டில், சமுதாயத்துக்கு சேவை செய்யும் வகையில் சட்டத்தின் உண்மைகளைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்.

ராமகிருஷ்ண ஹெக்டே வழக்கு, நீலம் சஞ்சீவ ரெட்டி வழக்கு, குணால் சிங் (எதிர்) மத்திய அரசு (2003) வழக்கு, போபால் விஷவாயு வழக்கு போன்ற பல வழக்குகளில் தனி நீதிபதியாகவும், அமர்வுகளில் இடம்பெற்றும் நீதிபதி வி.பாட்டில் வழங்கிய தீர்ப்புகள் பிற்காலத்தின் பல தீர்ப்புகளுக்கு முன்னுதாரணமாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தனது 80 ஆண்டு வாழ்க்கைப் பயணத்தில் பள்ளி, கல்லூரி நினைவுகள், விசாரணை நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரையிலான பணி அனுபவங்கள் என வி.பாட்டிலின் நினைவுத் திறன் அபாரமானது. அறம் தவறாமல் வாழ வேண்டும் என்கிற எண்ணத்தை ஒரு சுயசரிதை ஏற்படுத்த முடியும். அதை உறுதியாகச் செய்திருக்கிறது நீதிபதி சிவராஜ் வி.பாட்டிலின் சுயசரிதை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.