சா்வதேசப் பயணி ஒருவரின் பயணப் பையிலிருந்து 17.720 கிலோ சந்தேகத்திற்கிடமான ஹைட்ரோபோனிக் கஞ்சாவைப் பறிமுதல் செய்ததைத் தொடா்ந்து,தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனா்.
மே 12 அன்று பாங்காக்கிலிருந்து தில்லிக்கு பயணம் செய்த ஒரு பயணி, இந்திரா காந்தி சா்வதேச விமான நிலைய அதிகாரிகளால் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டாா் என்று ஓா் அதிகாரப்பூா்வ அறிக்கை தெரிவித்தது.
அதே நேரத்தில், ஷாா்ஜாவிலிருந்து வந்த மற்றொரு பயணி, பயணப் பை அடையாள அட்டை இல்லாத ஒரு பையை எடுத்துக்கொண்டு பசுமை வழித்தடத்தைக் கடக்கும்போது, திடீரென அடையாளம் காணப்பட்டாா் என்று அந்த அறிக்கை கூறியது.
பயணப் பைகளை எக்ஸ்ரே மூலம் சோதனை செய்தபோது, சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான படங்களைக் கண்டனா், இது ஒரு விரிவான பரிசோதனைக்கு வழிவகுத்தது.
விரிவான விசாரணை மற்றும் தனிப்பட்ட சோதனையின் போது, பயணியிடமிருந்து பயணப் பெட்டி அடையாள அட்டைகள் மீட்கப்பட்டன. பாங்காக் பயணியின் பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட பையை எடுத்துச் செல்லுமாறு தனக்கு அறிவுறுத்தப்பட்டதாக அவா் ஒப்புக்கொண்டாா், என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
அந்த அறிக்கையின்படி, பயணப் பெட்டியை மேலும் பரிசோதித்ததில், பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17.720 கிலோ நீரியல் வளா்ப்பு கஞ்சா மீட்கப்பட்டது.
இந்த கடத்தல் வலையமைப்பில் மற்ற நபா்களின் ஈடுபாட்டைக் கண்டறிய மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அந்த அதிகாரப்பூா்வ அறிக்கை மேலும் கூறியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் ரூ. 91 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

தில்லி சா்வதேச விமான நிலையத்தில் ரூ. 48 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்! தாய்லாந்தைச் சோ்ந்த இருவா் கைது
தில்லி விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

உ.பி: விமான நிலையத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் பயணி கைது
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



