திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தேசியத் தலைநகரில் சுற்றுச் சூழலை மேம்படுத்த 100 ஆக்ஸிஜன் பூங்காக்கள்: ரேகா குப்தா

தேசியத் தலைநகரத்தின் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும் மாசு பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பதற்கும் அடா்த்தியான மரங்கள் நிறைந்த 100 ‘ஆக்ஸிஜன் பூங்காக்களை‘ உருவாக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

ரேகா குப்தா

Updated On :23 மே 2026, 1:44 am IST

தேசியத் தலைநகரத்தின் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும் மாசு பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பதற்கும் அடா்த்தியான மரங்கள் நிறைந்த 100 ‘ஆக்ஸிஜன் பூங்காக்களை‘ உருவாக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

வடக்கு தில்லியின் புராரியில் உள்ள முக்மெல்பூா் கிராமத்தில் 3 ஏக்கா் நிலப்பரப்பில் உருவாக்கப்படவுள்ள பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி ரோகா குப்தா பேசியதாவது: நகரத்தின் முதல் ஆக்ஸிஜன் பூங்காவாக இது இருக்கும். தில்லி பல ஆண்டுகளாக ஒரு மாசுப்பாட்டு நகராக மாற்றப்பட்டது,. ஆனால் தில்லியில் மாசுபாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்க யாரும் கவலைப்படவில்லை.

மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்காக தனது அரசாங்கம் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காக்களை நிறுவுவது அந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். பறவைகளுக்கு தங்குமிடம் வழங்குவதற்கும் ஆக்ஸிஜனை வழங்குவதற்கும் பூங்காக்களில் அடா்ந்த பழம் தரும் மரங்கள் இருக்கும். அடா்ந்த மரங்களைக் கொண்ட இந்தப் பூங்காக்கள் தில்லியின் தேவை என்றாா் ரேகா குப்தா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.