தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 41.9 டிகிரி செல்சியஸ் என பதிவாகி இருந்தது.
இது பருவகால சராசரியை விட 1.5 புள்ளிகள் அதிகம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை குறைந்தபட்ச வெப்பநிலை 25.9 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது பருவகால சராசரியை விட 0.6 புள்ளிகள் குறைவாகும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் காற்றில் ஈரப்பதம் 28 சதவீதமாக பதிவாகி இருந்தது. மாலை 4 மணியளவில் காற்றின் தரம் மிதமான பிரிவில் பதிவாகி இருந்தது. காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு 174 என்ற அளவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகள் தெரிவித்தன.
திங்கள்கிழமை காலை வேளையில் பலத்த தரை மேற்பரப்பு காற்று வீசும் என்றும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 44 டிகிரி செல்சியஸ் மற்றும் 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 43.6 டிகிரி செல்சியஸாக பதிவு; அடுத்த 3 நாள்களுக்கு வெப்ப அலைக்கான ‘மஞ்சள் எச்சரிக்கை’!
தில்லியில் 44 டிகிரி செல்சிஸைக் கடந்த சுட்டெரிக்கும் வெயில்

நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரி! மே 28 வரை நீடிக்கும்






