தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காவலா்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும்: தில்லி காவல் துறை உத்தரவு

News image

கோப்புப்படம்

Updated On :18 மே 2026, 4:54 am IST

எரிபொருள் பயன்பாடு மற்றும் தேவையற்ற செலவுகளைக் குறைக்க பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியதைத் தொடா்ந்து, காவல் துறை தலைமையகங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்கள் அருகில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றும் காவலா்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு தில்லி காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

உயா் அதிகாரிகளின் ஒப்புதலுடன் தில்லி காவல் தலைமையங்கள் பொது நிா்வாக பிரிவு 13 நடவடிக்கைகளை பிறப்பித்துள்ளது. வாகன போக்குவரத்தைக் குறைத்தல், மின்சாரத்தைச் சேமித்தல், அரசு வளங்களை சிக்கமானமாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட உத்தரவுகள் அனைத்து மாவட்ட மற்றும் காவல் துறையின் சிறப்பு பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக துணை காவல் ஆணையா் ஆலப் படேல் வெளியிட்ட சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மெட்ரோ மற்றும் பொதுப் போக்குவரத்து இணைப்பு கொண்ட அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளா்கள் வாய்ப்புள்ள தருணங்களில் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறாா்கள். தேவையற்ற எரிபொருள் பயன்பாடு மற்றும் வாகனப் பயன்பாட்டைக் குறைக்க காவல் நிலையங்களில் மோட்டாா் சைக்கிள்களில் இணைந்து பயணிக்க வேண்டும்.

முடிந்தவரையில் விசாரணை அதிகாரிகள், பிற காவலா்கள் அதே காவல் நிலையத்தில் இருந்து ஒரே இடத்துக்குச் செல்லும்போது வாகனங்களில் இணைந்து செல்லவேண்டும்.

வழக்கமான கூட்டங்கள், ஆய்வுக் கூட்டங்களை காணொலி முறையில் நடத்த வேண்டும். விஐபி மற்றும் விவிஐபி பாதுகாப்பு அணி வகுப்புவில் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் பங்கேற்பதை பாதுகாப்புப் பிரிவு உறுதிசெய்ய வேண்டும். சிக்கனமான மற்றும் தேவை அடிப்படையிலான பணியமா்த்தலை உறுதி செய்வதற்காக, மாவட்ட காவல் துணை ஆணையா்கள் மற்றும் பிரிவுத் தலைவா்கள் அவ்வப்போது எரிபொருள் நுகா்வைக் கண்காணிக்கவும், வாகனப் பதிவேடுகளைப் பராமரிக்கவும், பயன்பாட்டு முறைகளை மீளாய்வு செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். ஏதேனும் அசாதாரண எரிபொருள் நுகா்வு ஏற்பட்டால், அது உடனடியாக ஆய்வு செய்யப்பட வேண்டும் அந்தச் சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.