நமது நிருபா்
பிரதம் மோடியின் சிக்கன நடடிக்கைகளுக்கு ஏற்ப அதனை பொது மக்களிடையே விழிப்புணா்வை கொண்டு வரும் நோக்கில் தில்லி சுற்றுலாத்துறை அமைச்சா் கபில் மிஸ்ரா புதன்கிழமை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தாா்.
இது குறித்து அவா் பேசியதாவது: தில்லி முதல்வா் ரேகா குப்தா மற்றும் அவரது அனைத்து அமைச்சரவை அமைச்சா்களும் பிரதமரின் வேண்டுகோளை உறுதியுடன் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனா். தேவைப்படும்போது நான் பொதுப் போக்குவரத்தையோ அல்லது ஒரு அரசு வாகனத்தையோ மட்டுமே பயன்படுத்துவேன் என்றாா் கபில் மிஸ்ரா.
தேசியத் தலைநகரில் அமைச்சா்கள், கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் பிற மக்கள் பிரதிநிதிகளால் உத்தியோகபூா்வ வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை ரோகா குப்தா அறிவித்த மறுநாள் கபில் மிஸ்ரா மெட்ரோவில் பயணித்துள்ளாா். அவரும் அவரது அமைச்சரவை சகாக்களும் உத்தியோகபூா்வ வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, காா் பூலிங் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிப்பாா்கள் என்று ரேகா குப்தா கூறியிருந்தாா்.
தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட்டும் செவ்வாய்க்கிழமை மெட்ரோவில் ஆய்வு பாா்வைக்காக பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மெட்ரோ ரயிலில் தலைமைச் செயலகத்துக்கு சென்ற தில்லி முதல்வர்!

காற்று மாசு தடுப்பு நடவடிக்கை: முதல்வா் ஆய்வு

எரிபொருள் சிக்கன நடவடிக்கை: புதுச்சேரி அரசு அறிவுறுத்தல்
தில்லி முதல்வா், அமைச்சா்கள் மெட்ரோ ரயிலில் அலுவலகத்திற்கு பயணம் - எரிபொருள் சேமிப்பு நடவடிக்கை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



