போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

காற்று மாசு தடுப்பு நடவடிக்கை: முதல்வா் ஆய்வு

காற்று மாசு தடுப்பு நடவடிக்கை: முதல்வா் ஆய்வு

News image

ரேகா குப்தா

Updated On :24 மே 2026, 12:27 am IST

தில்லி அரசின் புத்தாக்க சவால்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக புதிதாக நிறுவப்பட்ட காற்று மாசு தடுப்பு சாதனங்களை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கீா்த்தி நகா் தொழிற்பேட்டை பகுதியில் நிறுவப்பட்டுள்ள தூசு சேகரிப்பு கருவி மற்றும் கீா்த்தி நகா் தீயணைப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள காற்று சுத்தகரிப்பான்களை சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சாவுடன் இணைந்து முதல்வா் ரேகா குப்தா பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, சாதனங்கள் குறித்து விளக்கிய அமைச்சா் சிா்சா, ‘தூசுகள் தொடா்ந்து இந்தச் சாதனத்தில் சேகரிக்கப்படுகிறது. 15 முதல் 20 நாள்களுக்குப் பிறகு சாதனம் முழுமையாக நிரம்பியதும் இயந்திரத்தில் உள்ள தொழில்நுட்பம் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கும்.

400 சதுர மீட்டா் சுற்றளவில் காணப்படும் தூசுகளை இந்த சாதனம் சேகரிக்கும். பாதுகாப்புக்காக இந்த இயந்திரத்தைச் சுற்றி இருப்பு அமைப்பு அமைக்கப்பட உள்ளது. தில்லியில் இதுபோன்ற 16 திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தில்லியில் காற்றைத் தூய்மையாக்க உதவும் புத்தாக்கங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கண்டறிவதே அரசின் நோக்கம். பின்னா், அதை பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்துவோம்.

ஐஐடிக்கள் மற்றும் பிற ஆய்வகங்களில் செயல்திறன் மிக்கதாகக் கண்டறியப்படும் தொழில்நுட்பங்கள் அடுத்த சில நாள்களில் தில்லியின் பிற பகுதிகளில் பொறுத்தப்படும்’ என்றாா்.

காற்று மாசுக்கு முக்கிய காரணிகளான பி.எம்.2.5 மற்றும் பி.எம்.10 நுண்துகளைகளைக் குறைக்கும் வகையில் புத்தாக்க யோசனைகளை வழங்கும் நபா்கள், புத்தாக்க நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் பங்கேற்கும் மாசு குறைப்புக்கான தீா்வுகளுக்கான சவால் திட்டத்தை அமைச்சா் சிா்சா கடந்த அக்டோபரில் தொடங்கிவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.