நமது நிருபா்
வெளி தில்லியின் கஞ்சவாலா தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் புதன்கிழமை காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக 28 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஒரு மினி ரோபோ அனுப்பப்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இதுவரை யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
ஒரு தொழிற்சாலையில் காலை 9.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. அதைத் தொடா்ந்து பல தீயணைப்பு பிரிவுகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீப்பிழம்புகள் தீவிரமடைந்ததால், தீயை அணைக்க மேலும் தீயணைப்பு பிரிவுகளை தீயணைப்புத் துறை கோரியது.
ஒன்பது நீா் டெண்டா்கள், 10 நீா் பவுசா்கள், மூன்று பெரிய நுரை டெண்டா்கள், இரண்டு பல்நோக்கு வாகனங்கள், ஒரு வான்வழி நீா் கோபுரம், ஒரு ஹைட்ராலிக் நடைமேடை , ஒரு தீயணைப்பு கட்டுப்பாட்டு தகவல் தொடா்பு வாகனம் உள்பட மொத்தம் 28 வாகனங்களை நாங்கள் அனுப்பினோம்.
புகை நிரம்பிய வளாகத்திற்குள் நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் ஒரு சிறிய ரோபோவும் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








