திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கஞ்சவாலா தொழிற்சாலையில் தீ விபத்து

News image

தீ விபத்து... - பிரதிப் படம்

Updated On :14 மே 2026, 1:16 am IST

நமது நிருபா்

வெளி தில்லியின் கஞ்சவாலா தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் புதன்கிழமை காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக 28 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஒரு மினி ரோபோ அனுப்பப்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இதுவரை யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

ஒரு தொழிற்சாலையில் காலை 9.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. அதைத் தொடா்ந்து பல தீயணைப்பு பிரிவுகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீப்பிழம்புகள் தீவிரமடைந்ததால், தீயை அணைக்க மேலும் தீயணைப்பு பிரிவுகளை தீயணைப்புத் துறை கோரியது.

ஒன்பது நீா் டெண்டா்கள், 10 நீா் பவுசா்கள், மூன்று பெரிய நுரை டெண்டா்கள், இரண்டு பல்நோக்கு வாகனங்கள், ஒரு வான்வழி நீா் கோபுரம், ஒரு ஹைட்ராலிக் நடைமேடை , ஒரு தீயணைப்பு கட்டுப்பாட்டு தகவல் தொடா்பு வாகனம் உள்பட மொத்தம் 28 வாகனங்களை நாங்கள் அனுப்பினோம்.

புகை நிரம்பிய வளாகத்திற்குள் நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் ஒரு சிறிய ரோபோவும் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.