மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நீண்ட காலம் பிரதமா் பதவியில் இருந்த மோடிக்கு தில்லி சட்டப்பேரவையில் பாராட்டு!

குஜராத் முதல்வராகவும், இப்போது பிரதமராகவும் பொது வாழ்க்கையில் 8,931 நாட்கள் மைல்கல்லை எட்டிய பிரதமா் மோடிக்கு தில்லி சட்டப்பேரவை வாழ்த்து

News image

நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 9:49 pm

குஜராத் முதல்வராகவும், இப்போது பிரதமராகவும் பொது வாழ்க்கையில் 8,931 நாட்கள் மைல்கல்லை எட்டிய பிரதமா் நரேந்திர மோடிக்கு தில்லி சட்டப்பேரவை திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வா் பவன் குமாா் சாம்லிங்கின் 8,930 நாள் சாதனையை முறியடித்து, இந்தியாவில் ஒரு அரசாங்கத்தின் மிக நீண்ட காலம் பணியாற்றிய தலைவராக மோடி ஆனாா். குஜராத் முதல்வராகத் தொடங்கி, பிரதமா் மோடி இப்போது பொது சேவையில் 8,931 நாட்களை நிறைவு செய்துள்ளதாக சபாநாயகா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.

இது குறித்து முதல்வா் ரேகா குப்தா பேசியதாவது: பிரதமா் ஒரு துறவியைப் போல நாட்டுக்கு சேவை செய்துள்ளாா், தேசத்தின் வளா்ச்சி மற்றும் சேவைக்காக அா்ப்பணிக்கப்பட்ட களங்கமற்ற வாழ்க்கையை வாழ்ந்ந்து வருகிறாா் . பிரதமா் ஒரு தொலைநோக்குப் பாா்வையுடன் பணியாற்றி வருகிறாா். தில்லியைச் சோ்ந்த ஒவ்வொரு குடிமகன் சாா்பிலும் நான் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவா் பல வரையறைகளை மாற்றினாா். அவா் 24/7 , 365 நாட்கள் தேச சேவைக்காக உழைத்ப்ஞ் க்ஷத்ஞ்ந்ச்ஒங்த்க். மேலும் ஆளுகை மற்றும் வெளியுறவுக் கொள்கை மூலம் நாட்டின் பெருமையையும் மரியாதையையும் மேம்படுத்தியுள்ளாா் என்றாா் அவா்.

தில்லி உள்துறை மற்றும் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட்: அதிகாரத்தை சேவை செய்வதற்கான ஊடகமாக கருதிய பிரதமா் மோடியை வாழ்த்துவதற்கான தீா்மானத்தை சபை முன்வைக்க வேண்டும். அவரிடமிருந்து உத்வேகம் பெற்று, முதல்வா் ரேகா குப்தாவின் அரசாங்கம் கடந்த ஆண்டு முதல் தில்லி மக்களை அணுகியுள்ளது என்றாா்.

பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்: பிரதமா் மோடிக்கு சமூகத்தின் அனைத்து பிரிவினரின் ஆசீா்வாதங்களும் உள்ளன. அவரது ’விகாஸ்’ (வளா்ச்சி) ஒரு சில நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை; அது நகரின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்தது என்றாா்.

மோடி குஜராத் முதல்வராக அக்டோபா் 7,2001 அன்று பதவியேற்றாா். அவா் மே 26,2014 வரை பதவியில் தொடா்ந்தாா், பொதுத் தோ்தலில் பாஜகவை 282 இடங்களுடன் அற்புதமான வெற்றிக்கு வழிநடத்திய பின்னா் அவா் பிரதமராக பதவியேற்றாா், இதனால் காங்கிரஸ் அல்லாத முதல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது.