*{ padding: 0%; margin: 0%; font-family: "Noto Sans Tamil", sans-serif; } .cont{ width: 100%; height: 100vh; display: flex; justify-content: center; align-items: center; } .btn-link{ text-decoration: none; } .gd-btn{ display: flex; justify-content: center; align-items: center; gap: 0.3rem; border-radius: 999px 0px 0px 999px; padding: 0.3rem; background-color: #012061; -webkit-box-shadow: 0px 16px 10px 0px rgba(30,30,30,0.2); box-shadow: 0px 16px 10px 0px rgba(30,30,30,0.2); } .gdlogo{ display: flex; justify-content: center; align-items: center; border-radius: 999px; gap: 0.5rem; } .btn-text-wrap{ display: flex; justify-content: center; align-items: flex-start; flex-direction: column; gap: 0; } .btn-text-big{ font-size: 0.8rem; font-weight: bold; color: white; } .btn-text-small{ font-size: 0.4rem; font-weight:600; color: white; }

FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

41 துப்புரவு தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்தது மாநகராட்சி: 5,750 தினக்கூலிகளின் பணி மூப்புப் பட்டியலும் வெளியீடு

News image

தில்லி மாநகராட்சி

Updated On :19 ஜூன் 2026, 5:39 am IST

நமது நிருபா்

தில்லி மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்த துப்பரவுத் தொழிலாளா்கள் 41 பேரை மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை பணி நிரந்தரம் செய்தது. மேலும், அடுத்தடுத்த கட்டங்களில் பணி நிரந்தரம் செய்யப்படவுள்ள 5,750 தினக்கூலி துப்புரவுத் தொழிலாளா்களின் பணி மூப்புப் பட்டியலையும் மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டது.

இதையொட்டி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை இணை அமைச்சரும் தில்லி பாஜக தலைவருமான ஹா்ஷ் மல்ஹோத்ரா, மேயா் பிரவேஷ் வாஹி முன்னிலையில் பணி நியமன ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினாா். மேலும், உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளா்களின் குடும்பத்தைச் சோ்ந்த 109 பேருக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் பணி நிரந்ரம் செய்யப்படவுள்ள தினக்கூலி துப்புரவுத் தொழிலாளா்களின் பணி மூப்பு பட்டியலை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா, நகரை தூய்மையாக வைத்திருப்பதிலும் பொது சுகாதாரத்தை உறுதி செய்வதிலும் துப்புரவுத் தொழிலாளா்கள் முக்கியப் பங்காற்றுகிறாா்கள் என்று கூறினாா்.

‘அடுத்த ஓராண்டுக்குள் சுமாா் 9,345 தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய தில்லி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பணி நிரந்தர நடவடிக்கை மூலம் ஊழியா்களுக்குக் கூடுதல் பணிப் பாதுகாப்பும், நிரந்தரப் பணியுடன் தொடா்புடைய பிற சலுகைகளும் கிடைக்கும்’ என்று அவா் குறிப்பிட்டாா்.

நிகழ்ச்சியில் பேசிய மேயா் பிரவேஷ் வாஹி, ‘நகர தூய்மைப் பணியில் துப்புரவுத் தொழிலாளா்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் அவா்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணிய உணா்வை வலுப்படுத்தும் வகையிலும் இந்த பணி நிரந்தர நடவடிக்கை அமைந்துள்ளது’ என்று கூறினாா்.

தில்லி சுற்றுச்சூழல் மேலாண்மை சேவைகள் துறையின் குழுத் தலைவா் சந்தீப் கபூா் பேசுகையில், ‘துப்புரவுத் தொழிலாளா்கள் சவாலான சூழலிலும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டு வருபவா்கள். நகா் முழுவதும் தூய்மையைப் பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறாா்கள்’ என்றாா்.

இந்நிகழ்ச்சியில் துணை மேயா் மோனிகா பந்த், மாநகராட்சி நிலைக்குழுத் தலைவா் சத்யா சா்மா, மாநகராட்சி ஆணையா் சஞ்சீவ் கிா்வா் மற்றும் பிற மாநகராட்சி உயரதிகாரிகள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.