அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியில், நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி, புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மன்னாா்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

Updated On :25 ஜூன் 2026, 6:53 am IST

மன்னாா்குடியில், நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி, புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மைப் பணியாளா்களுக்கான ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மன்னாா்குடி நகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளா் சங்கம் (ஏஐடியுசி) சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணி தொழிலாளா் சங்கத் தலைவா் என். தனிக்கொடி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிபிஐ ஒன்றியச் செயலாளா் துரை. அருள்ராஜன் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளா் கலைச்செல்வன், நகரச் செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.