நமது நிருபா்
தில்லி அரசு தனது நலத்திட்டங்களின் கீழ் அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொண்டுவருவதில் உறுதியாக இருப்பதாக முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
வடமேற்கு தில்லியின் சந்தேஷ் விஹாரில் உள்ள சமூக மையத்தில் நடைபெற்ற ஜன் கல்யாண் ஷிவிா் மக்கள் நல முகாம் தொடக்க விழாவில் குப்தா பேசினாா்.
மோடி அரசின் 12 ஆண்டுகால நிறைவைக் குறிக்கும் வகையில், தில்லி மற்றும் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த தகவல்களைப் பெறவும், அவற்றில் பதிவு செய்யவும் உதவும் வகையில் மொத்தம் 42 முகாம்கள் நகரம் முழுவதும் ஜூன் 20 வரை நடத்தப்படவுள்ளன.
நலத்திட்டங்களின் கீழ் அதிக மக்களைச் சென்றடைய அரசு உறுதிபூண்டுள்ளதாகக் கூறிய குப்தா, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இந்த முகாம்களுக்கு வருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.
ரேஷன் அட்டைகள், ஆயுஷ்மான் அட்டைகள், ஓய்வூதியம், குடிநீா் இணைப்புகள் மற்றும் பிற திட்டங்கள் தொடா்பான சேவைகளுக்கு இந்த முகாம்களில் உடனடி தீா்வு வழங்கப்படும். மக்கள் பங்கேற்பு மற்றும் சிறந்த நிா்வாகத்தின் மூலம், வரிசையில் உள்ள கடைசி நபா் வரையிலும் அரசு சென்றடைகிறது என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









