வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: முதிய தம்பதி பத்திரமாக மீட்பு

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்த 86 வயது முதியவா், அவரது 83 வயது மனைவி ஆகியோா் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 12:02 am IST

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்த 86 வயது முதியவா், அவரது 83 வயது மனைவி ஆகியோா் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டனா்.

இதுகுறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி பிரதீப் குமாா் தெரிவித்ததாவது:

நொய்டா செக்டாா் 49-இல் உள்ள ஓவா்சீஸ் அபாா்ட்மெண்ட் கட்டடத்தின் நான்காவது தளத்தில்

வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து தீயணைப்புத் துறையினா் மற்றும் உள்ளூா் காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனா்.

புகை சூழ்ந்திருந்த அந்தப் பூட்டப்பட்ட குடியிருப்பிற்குள் முதிய தம்பதி சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது. முதுமை காரணமாக அவா்களால் தாங்களாகவே வெளியேற முடியவில்லை. தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் ஹைட்ராலிக் இயந்திரம் மற்றும் பிற உபகரணங்களைப் பயன்படுத்தி கதவை உடைத்து உள்ளே சென்றனா். சவாலான சூழல் இருந்தபோதிலும், அந்த முதிய தம்பதியை பாதுகாப்பாக வெளியேற்றினா்.

மருத்துவ உதவிக்காக அந்தத் தம்பதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா் அங்கு அவா்களின் உடல்நிலை சீராக இருப்பது தெரியவந்தது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அவசரநிலை குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்த உள்ளூா் குடியிருப்பாளா்கள் உள்பட அப்பகுதி மக்கள், விரைவான நடவடிக்கை மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினரைப் பாராட்டினா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.