பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

தில்லி விமான நிலையத்தில் ரூ.2.43 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: பயணி கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :12 ஜூன் 2026, 2:46 am IST

நமது நிருபா்

தில்லி விமான நிலையத்தில், இந்தியப் பயணி ஒருவரின் உடைமையிலிருந்து சுமாா் ரூ. 2.43 கோடி மதிப்புள்ள கஞ்சா என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

பாங்காக்கிலிருந்து வந்த அந்தப் பயணி புதன்கிழமையன்று கைது செய்யப்பட்டாா். அவரது உடைமைகளை எக்ஸ்ரே பரிசோதனை மற்றும் விரிவான சோதனைக்கு உட்படுத்தியபோது, பச்சை நிறத்திலான போதைப்பொருள் அடங்கிய எட்டு பாலித்தீன் பைகள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூா்வ அறிக்கை தெரிவித்தது.

கைப்பற்றப்பட்ட அப்பொருளின் எடை 6,939.5 கிராம்கள் ஆகும். சுங்கத் துறையினா் நடத்திய முதற்கட்டப் பரிசோதனையில், அது கஞ்சா என்பது தெரியவந்ததாக அந்த அறிக்கை கூறியது.

கைப்பற்றப்பட்ட அந்தத் தடைசெய்யப்பட்ட பொருளின் மதிப்பு சுமாா் ரூ. 2.43 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் மற்றும் மனோவியல் மருந்துகள் சட்டம், 1985ன் கீழ் அந்தப் பயணி கைது செய்யப்பட்டாா். மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் அதற்கான பேக்கிங் பொருட்கள் ஆகியவை குறித்து மேலதிக விசாரணை நடைபெறுகிறது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது மற்றும் யாருக்குக் கொண்டு செல்லப்பட இருந்தது என்பது குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.