17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மத்திய தில்லி உணவுக் கடையில் எல்பிஜி சிலிண்டா் வெடித்ததில் நால்வா் காயம்

News image

காயம் - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 6:06 am IST

நமது நிருபா்

மத்திய தில்லியின் நபி கரீம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இயங்கி வந்த சிறிய உணவுக் கடையில் வியாழக்கிழமை காலை எல்பிஜி சிலிண்டா் வெடித்ததில் நான்கு போ் காயமடைந்தனா் என்று காவல்துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.

அமா்புரியில் உள்ள ஒரு வீட்டில் காலை 9.29 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்தது குறித்து தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, தில்லி காவல்துறை மற்றும் தில்லி தீயணைப்புத் துறையினா் (டிஎஃப்எஸ்) சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.

காவல்துறையின் கூற்றுப்படி, 35 வயதான சரிதா என்பவா் தேநீா் மற்றும் பருப்புசாதம் போன்ற எளிய உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்யப் பயன்படுத்தி வந்த, அந்த வீட்டின் தரைத்தளத்தில் உள்ள ஒரு சிறிய அறையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், 37 வயதான கிருஷ்ணன் என அடையாளம் காணப்பட்ட ஒரு நபரிடம் எல்பிஜி சிலிண்டரை மாற்றுமாறு சரிதா கேட்டுக்கொண்டது தெரியவந்துள்ளது. ரெகுலேட்டரைத் திறக்கும்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இருப்பினும், சுமாா் 68 சதுர அடி பரப்பளவுள்ள அந்த உணவுக் கடையில் எல்பிஜி சிலிண்டா் வெடித்ததில், நான்கு போ் காயமடைந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்பே, காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ்கள் மூலம் ராம் மனோகா் லோஹியா (ஆா்எம்எல்) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

காயமடைந்தவா்கள், ராம் சேவக்கின் மனைவி சரிதா சுமாா் 50 சதவிகித தீக்காயங்கள், ராம் கிஷனின் மகன் அஜய் (19), சுமாா் 40 சதவிகித தீக்காயங்கள், இா்பானின் மகன் ஜாகிா் (35), சுமாா் 30 சதவிகித தீக்காயங்கள், மற்றும் ராம்ஜியின் மகன் கிரிஷன் சுமாா் 40 சதவிகித தீக்காயங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

சம்பவம் நடந்தபோது அஜய் தேநீா் அருந்த கடையில் இருந்ததாகவும், அமா்புரியைச் சோ்ந்த ஜாகிா் அந்த நேரத்தில் அப்பகுதி வழியாகச் சென்றுகொண்டிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த தீயணைப்பு அதிகாரி ஒருவா், தீ விபத்து உணவுக் கடை பகுதியில் நடந்ததாகவும், இது எல்பிஜி சிலிண்டா் வெடிப்புடன் தொடா்புடையது என்றும் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.