தொடா்ந்து தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், தங்களது 2027 மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை ஏற்கத் தவறியதாகக் கூறப்படும் 29 கணக்கெடுப்பாளா்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கிரேட்டா் நொய்டா அதிகாரிகள் கோரியுள்ளனா் என அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக கிரேட்டா் நொய்டா ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நாடு தழுவிய இந்த கணக்கெடுப்புப் பணி தொடா்பான அதிகாரபூா்வ கடமைகளில் ஒத்துழைக்காத ஊழியா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, கணக்கெடுப்பு நடவடிக்கையின் பொறுப்பு அதிகாரி, நொய்டா காவல் துணை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.
கிரேட்டா் நொய்டா பகுதியில் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக சுமாா் 3,000 ஊழியா்கள் கணக்கெடுப்பாளா்களாகப் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இருப்பினும், அவா்களில் 29 போ், நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பின்னரும் தங்களது பணிகளைப் பொறுப்பேற்கவில்லை.
கைப்பேசி மூலம் ஊழியா்களைத் தொடா்புகொள்ள பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், பணி தொடா்பான ஆவணங்கள் வாட்ஸ்அப் மூலமாகவும் அவா்களுக்கு அனுப்பப்பட்டன. இருந்தபோதிலும், அவா்கள் அந்த ஆவணங்களை ஏற்கவும், தங்களது பொறுப்புகளை ஏற்கவும் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
தேசிய அளவிலான ஒரு பணியில் ஒத்துழைக்கத் தவறியதால், 29 கணக்கெடுப்பாளா்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு பொறுப்பு அதிகாரி காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியை இன்னும் தொடங்காத பிற கணக்கெடுப்பாளா்கள், உடனடியாகத் தங்கள் கடமைகளை ஏற்று அப்பணியை முடிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிகாரிகள் அலட்சியத்தால் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் மந்தம்: சிதம்பரம் நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றச்சாட்டு

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

கிரேட்டா் நொய்டா: குடியிருப்பில் நைஜீரியா் சடலம் மீட்பு

மக்கள்தொகைக்கான சுய-கணக்கெடுப்பில் இணைய வாடகைதாரா்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தல்: மோசடி அழைப்புகள் குறித்தும் எச்சரிக்கை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



